Header Ads



சஜித் ஜனாதிபதியானதன் பின்னரே, நாமல் ஜனாதிபதியாக முடியும் - ஹர்ஷ டி சில்வா


-பா.நிரோஸ்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானதன் பின்னரே, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக முடியுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான முதல் நாள் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த ஹர்ஷ எம்.பி,  மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க, ராஜபக்ஷ குடும்பத்தினரால்  முயற்சிக்கப்படுகிறது என்றார்.

அத்துடன், இந்நாட்டின் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ வர முடியும். ஆனால் அதற்கு முன்னர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் எனவும் எனவே, சஜித்துக்கு பின்னரே நாமல் ஜனாதிபதியாவார் எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.