இரட்டை வேடம் போடுகிறார் மல்கம் ரஞ்சித் - ஞானசாரர் குற்றச்சாட்டு
மதத் தீவிரவாதத்தை ஆதரவு வழங்கி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் இரட்டை முகவராக பேராயர் மல்கம் ரஞ்சித் மாறி விட்டதாக, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியாவில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மல்கம் ரஞ்சித் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். அவருக்கு அரசாங்கத்துடன் பிரச்சினை இருந்தால், அதனை தனிப்பட்ட முறையில் விவாதிக்க வேண்டும். அதைவிடுத்து மதத் தீவிரவாதத்தை வளர்க்க, துணை நிற்கக்கூடாது எனவும் ஞானசாரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment