Header Ads



இன்றிரவு 8 மணி முதல், முடக்கப்படும் 8 பிரிவுகள் (முழு விபரம்)


கம்பஹா, களுத்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களின் 8  கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று இரவு 8 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளதென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹுரலு கெதர மற்றும் கலுஅக்கல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு பிரிவும் களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதென்ன பொலிஸ் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு, பெலவத்த வடக்கு ஆகிய கிராம உததியோகத்தர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் என்பன தனிமைப்படுத்தல் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன



No comments

Powered by Blogger.