Header Ads



2 வயது குழந்தையை காணவில்லை - மக்களின் உதவியை நாடும் அதிகாரிகள்


நீர்கொழும்பு - தலஹேனா பகுதியில் இருந்து 2 வயது மற்றும் 10 மாத வயதுடைய ஒரு குழந்தை காணாமல் போயுள்ளது.

காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.ஏ) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட NCPA, காணாமல் போன பெண் குழந்தையின் தாய் இது தொடர்பாக அதிகாரத்திடம் புகார் அளித்ததாக கூறினார்.

சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால்  அவசர ஹாட்லைன் 1929 அல்லது தொலைபேசி எண் 0112 778911 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 



No comments

Powered by Blogger.