Header Ads



பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த, கிம்புலா எல குணா மற்றும் அவருடைய மகன் சென்னையில் கைது


பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கிம்புலா எல குணா சென்னையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

இதன்போது அவருடைய மகன் மற்றும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ´பும்மா´ எனும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இடமபெற்ற மக்கள் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட எல்ரீரீஈ தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சித்தையா குணசேகரம் எனும் கிம்புலா எலே குணாவை கைது செய்வதற்காக இரகசிய பொலிஸார் தேடி வந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.