Header Ads



றிசாத்தை அரசாங்கம் பாதுகாக்கவில்லை - அமைச்சர் பீரிஸ்


சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை அரசாஙகம் பாதுகாக்கவில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோட முனையும் எவரையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசாங்க அமைச்சர் எவரும் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதியுதீனை கைதுசெய்வதறகான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனை நிறைவேற்றுவது காவல்துறையினரின் கடமை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.