கொழும்பும் அதிக ஆபத்து நிலவும் பகுதி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
நாளொன்றிற்கு பத்தாயிரம் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை செய்வதற்கு கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான கொள்கைகளை தரமுயர்த்தவேண்டும்,சரியான சோதனை கொள்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment