Header Ads



திருடனை பிடிக்க ஓடும் புகையிரத்திலிருந்து பாய்ந்த பெண்


பெண் ஒருவரின் கைப்பையை திருடிய பின் ஓடும் புகையிரதத்திலிருந்து பாய்ந்த ஒருவரை பிடிக்க கைப்பையை பறிகொடுத்த பெண்ணும் ஓடும் புகையிரதத்திலிருந்து குதித்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.


அளுத்கமவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த புகையிரதத்திலே கொழும்பின் புறநகர் - மொறட்டுவ ஏகடஉயன பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


புகையிரதத்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து கைப்பையை திருடியவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரை பிடிப்பதற்காக புகையிரதத்திலிருந்து பாய்ந்த பெண் காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை பெண்ணிடம் இருந்து கைப்பையை திருடியவர், தாம் வீட்டு வாடகை செலுத்துவதற்காகவே அதனை திருடியதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.