மத்தியகிழக்கு நாடுகளில் இதுவரை, 42 இலங்கையர்கள் கொரோனாவினால் மரணம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிவாய்ப்பை தேடிச் சென்ற பெருமளவான இலங்கையர்களில் எழுவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பின்மூலம் மத்திய கிழக்கில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம்,சவுதிஅரேபியா குவைத் கட்டார், ஓமான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்த 42 இலங்கையர்களினது குடும்பத்தவர்களுக்கும் நஸ்ட ஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment