Header Ads



இலங்கையில் அதிகம் தேடப்படும் 13 குற்றவாளிகள் – பொலிஸ் அதிகாரி

இலங்கையில் அதிகம் தேடப்படும் 13 பாதளஉலக குற்றவாளிகளின் விபரங்களை சேகரிப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ்நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் திணைக்களம் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் தங்கியுள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அடையாளம் கண்டு சர்வதேச பொலிஸாரின் உதவியின் மூலம் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த விபரங்களை சேகரிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணதுக்கான பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழும் 13 பாதாளஉலக குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை அவர்கள் மறைந்திருந்த நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு கொண்டுவருவதற்காக நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ்நிலையங்களை அவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.