Header Ads



கம்பஹா நீதிமன்றத்தினால் ஒருவருக்கு, மரண தண்டனை விதிப்பு

நிட்டம்புவ எல்லக்கல என்னும் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதான நபர் எல்லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

2006ம் ஆண்டு தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் நபர் ஒருவரை குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

நீண்ட காலமாக காணப்பட்ட பகைமையினால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.