Header Ads



ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் தாக்குதல் - நாமல் கண்டனம்

கொழும்பில் நேற்று -09- அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் மீது, காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டமை குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இந்த தாக்குதலை தான் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறையை சேர்ந்த சிலரின் சமீபத்திய நடவடிக்கைகள் பொலிஸ் திணைக்களத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ள அவர், நான் பொலிஸாரின் இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதுடன் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.