Header Ads



பல்டி அடித்தார் நிஷாந்த முத்துஹெட்டிகம


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்தேகம தொகுதியின் அதிகார சபையை கலைத்து விட்டதாகவும் தான் உட்பட உறுப்பினர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் துணை செயலாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலி பத்தேகமயில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை, காலி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க முடியாமல் போன காரணத்தினாலேயே நாங்கள் பத்தேகம தொகுதியின் மூன்று அதிகார சபைகளை கலைத்தோம். எமது மக்களின் கோரிக்கை மற்றும் தீர்மானத்திற்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எமது மக்களை பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகும் அனைவரையும் பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்ளுமாறே நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.