Header Ads



3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதியா..? சஜித் கேள்வி

கருணா அம்மான் தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடுவெலயில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்தார் என கருணா அம்மான் தெரிவித்திருப்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதிஅமைச்சராகவும் பதவி வகித்தவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா அம்மான் சமீபத்தில் தான் ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலைசெய்ததால் கொரோனா வைரசிரனைவிட ஆபத்தானவன் எனவும், மகி;ந்த ராஜபக்ச தனக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியுள்ளார் எனவும் சஜித்பிரேமதாச கடுவெலயில் சுட்டிக்காட்டியுள்ளார்.

3000 படைவீரரை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான மிகச்சிறந்த தகுதியா என சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பௌத்தமத தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.