Header Ads



விருப்பு இலக்கங்கள், தற்போது வழங்கப்படாது

பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை விருப்பு இலக்கங்களை விநியோக்காமல் இருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

விருப்பு இலக்கங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (12) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் அந்த நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. 

பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த பின்னர் விருப்பு இலக்கங்களை விநியோகிப்பது உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.