Header Ads



மின்சாரம் தாக்கி இலங்கையர், கனடாவில் மரணம்

கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் மின்சாரம் தாக்கி யாழ்ப்பாண தமிழர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனடாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தின் மத்தியில் ஒட்டாவா சுரேஷ் என்ற பெயரில் நன்கறியப்பட்ட யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுரேந்திரன் தம்பிராஜா (52) என்பவரே உயிரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் (15) மாலை ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ், உதவி செய்துகொண்டிருந்த வேளை 3வது வாகனம் மின் கம்பத்துடன் மோதியது. இதில் மின் கம்பியின் உயரழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுரேஷ் உதவிக்கு சென்ற -முதலாவதாக விபத்தில் சிக்கிய சாரதி சிறு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.