மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை, மீண்டும் கூட்டத் தேவையில்லை - பொதுஜன பெரமுன
(இராஜதுரை ஹஷான்)
மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித நன்மையும் ஏற்படாது. நெருக்கடி நிலையிலும் எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு செயற்படுவது வெறுக்கத்தக்கது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் ஒழிப்புக்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்து வெற்றியடைந்துள்ளது.
கொரோனா வைரஸை காரணம் காட்டி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள். இவர்கள் குறிப்பிடுவது பொருத்தமற்ற காரணிகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ளது.
மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியம் அரசியலமைப்பின் பிரகாரம் தோற்றம் பெறவில்லை . ஜனாதிபதி எக்காரணிக்காகவும் பாராளுமன்றத்தை கூட்டமாட்டார்.
Post a Comment