Header Ads



மேலதிக வகுப்பு நடாத்திய, பாடசாலை அதிபர் கைது

- எம். செல்வராஜா -

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்திய  மடுல்சீமைப் பகுதியின் தமிழ்ப் பாடசாலை அதிபர் ஒருவரை, மடுல்சீமை பொலிசார் நேற்று (04) கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியின் மாதோவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, அங்கு சென்ற பொலிஸார், வித்தியாலய அதிபரைக் கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த அதிபர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் அவருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வித் திணைக்கள சுற்றறிக்கையை மீறி, வகுப்புக்கள் நடாத்தியமை கருதியே, இவ் அதிபர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.