பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார, ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் - Dr ஆனந்த
இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக, கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
வழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த தொற்றினை முழுமையாக இல்லாமல் செயற்வதற்கு பொது மக்கள் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அவ்வாறின்றி மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினால் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா நாடுகளை போன்று பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment