Header Ads



கொரோனா ஒழிப்பில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயற்படும் இலங்கை பாதுகாப்பு பிரிவு

இந்தியா மாத்திரமன்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் ராணுவத்தை தாம் ஒருபோதும் கோரவில்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக நேற்றைய தினம் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தாம் எந்தவொரு நாட்டு ராணுவத்தின் ஒத்துழைப்புக்களையும் நாடவில்லை என கூறியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை பாதுகாப்பு பிரிவு ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. They all liars...just named as medias... for those nonsense no need to reply....even...suppose if they come here then they will change all our well-planned system. First of all we have to close our nose first...hihihihihi

    ReplyDelete

Powered by Blogger.