Header Ads



மூன்றரை வயதுக் குழந்தைக்கு, சாராயம் பருக்கிய தந்தை

(எச்.எம்.எம்.பர்ஸான்)

தனது மூன்றரை வயதான மகளுக்கு தந்தையொருவர் சாராயம் பருக்கிய சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மது அருந்திவிட்டு போதையில் குழந்தைக்கு சாராயம் பருக்கியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர்.

No comments

Powered by Blogger.