Header Ads



பாலித்த குறித்து,, மனோவின் பார்வை

நண்பர் பாலித தேவரபெரும, களுத்துறை மாவட்டத்தில் அவரது தொகுதி மக்களுக்கு பணி செய்வதை வரவேற்கிறேன்.
அங்கே களுத்துறை மாவட்டத்தில் இருந்துகூட பலர் என்னை அழைத்து உதவி கோருகிறார்கள். எல்லோராலும், எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. அவரால் முடிந்ததை அவர் செய்கிறார்.
இங்கே நாம் எம்மால் முடிந்ததை செய்கிறோம். ஆனால், அவரை விட பல மடங்கு வாழ்வாதார நிவாரண பணிகளை, நாம் இங்கே, பல மாவட்டங்களில், எமது வலைப்பின்னல் மூலம் செய்து விட்டோம். இன்னமும் செய்கிறோம்.
நண்பர் பாலித, அவரே சமைப்பது, அவரே கொண்டு போவது, அவரே பரிமாறுவது, சுதந்திரமாக உடை உடுத்துவது, தெருவில் தூங்குவது, இவற்றை படம் பிடித்து ஊடகங்களில் பதிவேற்ற ஒரு குழு அவருடன் இருப்பது, என்று அவரது பாணி போகிறது.
அதை அவர் செய்யட்டும். எதை செய்தாவது அவர் மக்களுக்கு வாழ்வாதார நிவாரண பணி செய்வதை வாழ்த்தி வரவேற்கின்றேன்.
சும்மா இருந்துகொண்டு, முகநூல் அரசியல் செய்யும் திருட்டு பேர்வழி அரசியல் நபர்களை விட நண்பர் பாலித நூறு மடங்கு உயர்ந்தவர்.
ஆனால், அவருடன் தயவு செய்து என்னை ஒப்பிட வேண்டாம். எனது தளம், களம், பாணி வேறு. அவரது பாணி வேறு.
அவரிடம் சாதாரண மக்களுடனேயே வாழும் எளிமை இருக்கிறது. நானும் நிச்சயமாக எளிமையானவன்தான். ஆனால், என் எளிமை என்பதற்கு அர்த்தம் வேறு. யோசித்து பார்த்தால் இது புரியும்.
கடந்த 2018ல் பாராளுமன்றத்தில், மிளகாய் வீசி, அடித்துக்கொண்ட வேளையில், இவரும் கத்தி போன்ற பொருளை எடுத்துக்கொண்டு. ஓடிப்போய் சண்டையில் ஈடுபட்டார்.
நான் என் இருக்கையில் இருந்தபடி அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒருவேளை, நானும் ஓடிப்போய், சண்டை போட்டு கட்டி புரண்டு இருக்க வேண்டுமோ?
நாம், இன்று எதிர்கட்சி என்ற முறையில், ஒரு கோணத்தில், வாழ்வாதார நிவாரணங்கள் வழங்குவதை இன, மத, அரசியல் பாரபட்சங்கள் இன்றி முறையாக செய்யும்படி அரசை வலியுறுத்தி, 
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இருக்கும் கூட்டங்களில் தவறாமல் கலந்துக் கொண்டு தேசிய அரங்கில் நமது மக்களுக்காக குரல் எழுப்புகிறோம்.
அதேவேளை, இன்னொரு கோணத்தில், மத்திய அரசு வரும்வரை காத்திருக்காமல், நாமே நமது கட்சி வலைப்பின்னல், சமூக நிறுவனங்கள், கொடைவள்ளல்கள் ஆகியோரின் துணையுடன் இயன்ற உதவிகளை சொந்த நிதியின் மூலம் மக்களுக்கு செய்து வருகிறோம்.
நாம இந்த இரண்டு கோணங்களில் எம் கடமையை செய்கிறோம்.
பாலித தெவர, என்னுடன் மிக நட்புடன் பழகுபவர். சிங்களத்தில் மட்டுமே பேசுவார். அவரது மகன் இறந்த போது அவர் வீட்டுக்கு போய் நீண்ட நேரம் அவருடன் அமர்ந்து இருந்தேன். அந்த மரணம் அவரை மிகவும் பாதித்தது.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஒருபோதும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்தி நான் பார்த்தது இல்லை.
எம்பிக்களின் முக்கியமான இன்னொரு பணியான, பாராளுமன்றத்தின் பல்வேறு குழுக்களில், பங்கேற்று, கருத்து பரிமாறி, நாட்டின் போக்கு தொடர்பில் முடிவுகளை எடுக்கும், அப்படி எந்தவொரு குழுவிலும் அவர் பங்கு பற்றியதாக நான் அறியவில்லை.
பாராளுமன்றத்துக்கு வெளியேயும், கலாச்சார, தொழிற்சங்க, அறிவுசார், சிவில் சமூக மேடைகளில் அவரை நான் கண்டதில்லை.
கடந்த ஒரு பத்து ஆண்டுகளாக நான் நூற்றுக்கணக்கான சிங்கள தொலைக்காட்சி ஊடகங்களின் அரசியல் விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். இதில் ஒன்றிலும் இவரை நான் கண்டது இல்லை.
தேசிய அரசியல் மேடைகளிலும் அவர் ஏறி பேசியதை நான் கண்டது இல்லை.
களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் தொழிலாளருக்கு சோறு கொடுக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். அது நல்லது.
ஆனால், அதே தமிழ் தொழிலாளரின் அரசியல், சமூக உரிமைகள், தாம் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் உரிமை, போன்றவற்றை அவர் பெரிதும் அங்கீகரிப்பது இல்லை.
அவரும், அவரது மகனும், ஒரு களுத்துறை மாவட்ட உள்ளூர் தமிழ் அரசியல்வாதியை அடித்து, அவமானப்படுத்தி, மத்துகமை முச்சந்தியில் முழந்தாளிட்டு உட்கார வைத்திருந்தார்கள்.
அதன் பிறகும் அந்த தமிழ் அரசியல்வாதியை அவர் மிரட்டிக்கொண்டு இருந்தார் என எனக்கு முறையீடு செய்யப்பட்டது. நான் ரணிலிடம் இதை சொன்னேன். இது பழைய ஒரு கதை. ஆனாலும் இது நடந்தது.
என்றாலும் அவர் இன்று சோறு போடுகிறாரே! ஆகவே அவரை பாராட்டுகிறேன். மேலும் அரசியல்வாதிகள் காலவோட்டத்தில் மாறுவது இலையா? 
இதையெல்லாம் மீறி அவர், இயற்கை, செயற்கை இடர்களின் போது தெருவில் இறங்கி மக்களுடன் செயற்படுகிறார். இந்த மக்கள் பணி, அவர் உடம்பில் ஊறியது. ஒரு கிராமிய சிங்கள மனிதனின் எளிமை அவரிடம் அபரிதமாக உண்டு.
களுத்துறை மாவட்டத்தில், அவரது தொகுதியில் அவர் ஓடி திரிகிறார். அவரது மாவட்ட சிங்கள அரசியல்வாதிகளுக்குதான், அவர் முதல் உதாரணம்.
அவர் மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்குமானால், அது தூரதிஷ்டமே. தனக்கு உதவினார் என பாலிதவே கூறும் நாமல் ராஜபக்ச, இந்த விஷயத்தில் அவருக்கு உதவிடுவார் என எண்ணுகிறேன்.

Mano Ganesan

10 comments:

  1. பாலித இனவாதம் இல்லாத ஒரு சிறந்த மனிதர் நீர் இரட்டை முகம் கொண்ட நய வஞ்சகன். உம்மை அவரோடு ஒப்பிட முடியாது

    ReplyDelete
  2. பொறாமை. கோட் சூட்டை கழட்டி விட்டு வாருங்கள் எல்லாம் சரி வரும்...

    ReplyDelete
  3. பொறாமை. கோட் சூட்டை கழட்டி விட்டு வாருங்கள் எல்லாம் சரி வரும்...

    ReplyDelete
  4. இவ்வளவு இக்கட்டான நேரத்தில இப்படி துணிந்து சேவையாற்றும் பாளித பற்றி இந்த நேரத்தில் இவருக்கு ஏன் இப்படி ஒரு ஆக்கம்.

    ReplyDelete
  5. Yes , I agreed with NGK , Palitha a great human being not like these pol politicians!

    ReplyDelete
  6. மனோ(ன)நோய் பிடித்தவன் போன்று எதை எதையெல்லாம் உளறுகின்றார். பாவம்

    ReplyDelete
  7. He is with heart. You are a recist

    ReplyDelete
  8. மனோ அவர்களே.
    நீங்களே சொல்லிவிட்டீரே அவர் பாணி வேறு எனது பாணி வேறு என்று.
    அப்புறம் எதுக்கு இந்த பதிவு.
    உங்கள் பாணியில் நீங்கள் செல்லுங்கள். அவர் பாணியில் அவர் செல்லட்டும்.
    எதுக்கு இந்த ஒப்பீடு.
    இதுக்கான காரணம் வயித்து எரிச்சல் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete

Powered by Blogger.