Header Ads



ஜனாதிபதியுடன் சஜித் நாளை முக்கிய சந்திப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென்றும், இதற்கான கோரிக்கை சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்டதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று பரவலின் பின்னர், ஜனாதிபதியுடன் சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் முன்னெடுக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.