Header Ads



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் 188 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி இதுவரை நாட்டில் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

தற்போதைய நிலையில் 150 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.