கத்தாரில் உள்ள அனைத்து, பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் நிறுத்தும்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கத்தாரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆத் தொழுகை போன்றவற்றை இன்றைய தினம் லுஹர் தொழுகை முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தும் படி இஸ்லாமி விவகார அமைச்சு (Awqaf ) அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தினந்தோறு பிரார்த்தனைகளில் ஈடுபடும் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே அனைவரும் தங்களது வீடுகளிலேயே தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் அதான் ஒலிக்கும் என்பதோடு, பள்ளிகளை மிக விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைளை உரிய அதிகாரிகாளுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் என்பதாகவும் Awqaf தெரிவித்துள்ளது.
Post a Comment