Header Ads



மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ், வேட்பு மனு தாக்கல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்ற அதேவேளை வேட்பு மனுவும் வியாழக்கிழமை 19.03.2020 தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை முன்னாhள் உறுப்பினர் ஷிப்லி பாறூக், சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான ஹபீப் றிபான், மர்சூக் அஹமட்லெப்பை, எம்.எம்.பி. சமந்த பண்டார அபேவிக்ரம உட்பட எட்டுப்பேர் வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ளனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தை நிலைநாட்டுகின்ற ஒரே இடமாக மட்டக்களப்பு அன்று தொடக்கம் இன்றுவரை திகழ்வதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலமுகா தனித்துப் போட்டியிடுகின்றது.

இம்முறையும் அக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுhக வெற்றி பெற்று இன மத பேதமின்றி சேவையாற்றும்' என்றார்.

No comments

Powered by Blogger.