Header Ads



முகவர்களுக்கு கடவுச் சீட்டையோ, முற்பணமோ வழங்க வேண்டாம் - ஹஜ் யாத்திரிகர்களுக்கு அறிவுறுத்து

2020 ஹஜ் கட­மையை நிறை­வேற்­ற­வுள்ள ஹஜ் யாத்­தி­ரிகர் எவரும் ஹஜ் முக­வர்­க­ளுக்கு கட­வுச்­சீட்டை வழங்­கவோ முற்­பணம் செலுத்­தவோ வேண்டாம். அவ்­வாறு செலுத்­தி­யி­ருந்தால் உட­ன­டி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

ஹஜ் கட்­ட­ணத்தை திணைக்­களம் சிபா­ரிசு செய்யும் அரச வங்­கி­யொன்றில் கணக்­கொன்­றினைத் திறந்து அந்த வங்கிக் கணக்­கிலே வைப்­பி­லிட வேண்டும் வங்­கியின் பெயர் விபரம் ஓரிரு நாட்­களில் திணைக்­க­ளத்­தினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டு­மென்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் 2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எந்த ஹஜ் முகவர் நிலை­யத்­தையும் தொடர்பு கொள்ளத் தேவை­யில்லை. ஒரு வாரத்­தினுள் 2020 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­களின் பட்­டியல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும். அது­வரை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் காத்­தி­ருக்­கும்­படி வேண்­டப்­ப­டு­கி­றார்கள்.

அத்­தோடு சில ஹஜ் முக­வர்­களின் அனு­ம­திப்­பத்­திரம் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது. சில ஹஜ் முகவர் நிலை­யங்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. சில தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. சில முகவர் நிலை­யங்கள் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான ஹஜ் முகவர் நிலை­யங்­களை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். இவ்­வா­றான முகவர் நிலை­யங்­களின் பட்­டி­யலும் ஒரு­வார காலத்­துக்குள் வெளி­யி­டப்­படும்.

இவ்­வ­ருடம் ஹஜ் 3 பொதி­களின் கீழ் (Packages) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 5 இலட்­சத்து 75 ஆயிரம், ரூபா 6 ½ இலட்சம் ரூபா, 7 ½ இலட்சம் ரூபா என மூன்று பொதிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முக­வர்­களைத் தெரி­வு­செய்து கொள்­ளும்­போது முகவர் நிலை­யத்தினூடா­க தாம் எந்­தப்­பொ­தியில் செல்­வது என்­பதை கடிதம் மூலம் உறுதி செய்­து­கொள்­ளலாம்.

திணைக்­களம் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள முகவர் நிலை­யங்­கிளின் பட்­டி­யலை வெளி­யிட்­டதும் தான் விரும்பும் முகவர் நிலை­யத்தை தொடர்பு கொள்­ளலாம்.

அது­வரை அவர்­க­ளிடம் கட­வுச்­சீட்­டினைக் கொடுக்­க­வேண்­டாம்.
ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எந்தக் காரணம் கொண்டும் முகவர் நிலை­யங்­க­ளுக்கு முற்­பணம் செலுத்­தக்­கூ­டாது.

25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் திணைக்­களம் விரைவில் அங்­கீ­க­ரிக்­க­வுள்ள வங்­கி­யொன்றில் புதி­தாக ஹஜ் வங்கிக் கணக்­கொன்­றினை ஆரம்­பித்து அக்­க­ணக்­கிலே ஹஜ் கட்­ட­ணத்தை வைப்­பி­லிட வேண்டும். திணைக்­க­ளத்தின் மேற்­பார்­வையின் கீழ் இக்­க­ணக்கு செயற்­படும். முக­வர்­க­ளுக்கு இந்த வங்கிக் கணக்கின் ஊடா­கவே பணம் செலுத்­தப்­படும். திணைக்­க­ளத்­துக்கு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அறி­வித்­தாலே பணம் முக­வர்­க­ளுக்கு மாற்­றப்­படும்.

அத்­தோடு இவ்­வ­ருடம் 50 கோட்டாவுக்குக் குறைவாக முகவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. 50 கோட்டாவுக்கு மேலதிகமாக கடந்த வருடங்களில் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொண்ட முகவர் நிலையங்களின் விபரங்கள் யாத்திரிகர்களின் நன்மைக்காக விளம்பரம் செய்யப்படும்.

எனவே, ஹஜ் யாத்திரிகர்கள் இன்னும ஓரிரு தினங்கள் பொறுமைகாக்கும்படி வேண்டப்படுகின்றார்கள் என்றார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

1 comment:

  1. ஹஜ் ஏற்பாடுகள் சிறப்பாகத் தெரிகின்றன. அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தினால் ஹஜ்ஜாஜிகள் ஹஜ் சேவையின் உச்சப்பயனை அடைந்து கொள்ளமுடியும். ஆனால் ஹஜ்ஜின் உண்மையான நோக்கத்தை அடைந்துகொள்ள ஒவ்வொரு ஹாஜியும் தயாராக இருக்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஹாஜியும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். ஹஜ் முடிந்து ஊரை நோக்கி வரும்போது கொண்டு செல்லவேண்டியவற்றைப் பற்றி அல்லாஹ் கூறும் போது خير الزاد التقوى பிரயாணத்தின் போது தன்னுடன் கொண்டு செல்லும் பொருட்களில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வுடைய அச்சம் என அல்லாஹ் கூறும் போது பெரும்பாலான ஹாஜிகளின் திரும்பி வரும் போது கொண்டுவரும் பொருட்களின் சாரசரி நிறை 700 -1000 கிலோ வரையில் இருக்கும். காரணம் கேட்டால் அந்த ஹாஜியின் பொதி 1500 கிலோ, என்னுடையது வெறுமனே 800 கிலோ தான் என்பது தான் பதில். இந்த சவூதியைச் சுருட்டிக் கொண்டு திரும்பும் பேராசை எனது அனுபவத்தைப் பொறுத்தவரை இலங்கை ஹாஜிகளிடம் மாத்திரம் தான் உள்ளது. உதாரணமாக, மலேசிய ஹாஜிகளைப் பார்த்தால் அவர்கள் அனைவரும் கொஞ்சம் ஸம்ஸம் நீர், கொஞ்சம் பேரீத்தம்பழம் தவிர வேறு எதையும் கொண்டு செல்ல மாட்டார்கள். குறிப்பாக பிரிட்டன்,கனடா நாட்டவர்கள் திரும்பிச் செல்லும் போது பல்வேறு வௌியிடப்பட்ட அல்குர்ஆன் பிரதிகளைத்தான் தம்முடன் கொண்டு செல்வார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இலங்கை ஹஜ்ஜாஜிகள் மக்கா சென்று இறங்கியவுடன் சொப்பிங் போவது தான் அவர்களின் ஒரே எண்ணம். தவாபுல் குதும் அதற்கும் பிறகு. எனவே, எங்கள் ஹஜ்ஜாஜிகள் பெரும்பாலானவர்களுக்கும் இலங்கையின் அரசியல்வாதிகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.