சுகாதார சேவையாளர்கள் முப்படையினரின் மனிதாபிமானமும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைய, உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுவதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்கு முடியும் என்பதுடன், இந்த கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கான பங்களிப்பையும் வழங்க முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரித்திருக்கிறார்.
சுகாதார சேவையளர்களின் பணியைப் பாராட்டும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர், அதில் மேலும் கூறியிருப்பதாவது:
"எமது நாட்டின் சுகாதார சேவையாளர்கள் மற்றும் முப்படையினரின் மனிதாபிமானம் மற்றும் அர்ப்பணிப்பான சேவை ஆகியன பாராட்டுக்குரியவை. அதேவேளை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைய, உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுவதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்கு முடியும் என்பதுடன், இந்த கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கான பங்களிப்பையும் வழங்க முடியும்.
அதேவேளை தமது அதிநவீன ஹோட்டல்களை தற்காலிக கொரோனா வைரஸ் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment