Header Ads



லுணுகம்வேர விபத்தில், அறுவர் பலி

லுணுகம்வேர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 22ஆவது மைல் கல்லுக்கு அருகில் இன்றுகாலை - இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென லுணுகம்வேர பொலிஸார் தெரிவித்தனர்.

காலியை சேர்ந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

மத்தலையிலிருந்து வெல்லவாய மாத்தறை வீதியில் பயணித்த வானொன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த வானில் சாரதி உட்பட 9 பேர் பயணித்துள்ளனர்.

காயமடைந்த சாரதியும் ஏனையோரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.