லுணுகம்வேர விபத்தில், அறுவர் பலி
லுணுகம்வேர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 22ஆவது மைல் கல்லுக்கு அருகில் இன்றுகாலை - இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென லுணுகம்வேர பொலிஸார் தெரிவித்தனர்.
காலியை சேர்ந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மத்தலையிலிருந்து வெல்லவாய மாத்தறை வீதியில் பயணித்த வானொன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த வானில் சாரதி உட்பட 9 பேர் பயணித்துள்ளனர்.
காயமடைந்த சாரதியும் ஏனையோரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Post a Comment