Header Ads



இத்தாலியில் கொரோனாவில் இருந்து, பூரண குணமடைந்த இலங்கைப் பெண்


இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இலங்கைப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றுக்கு உள்ளாகிய இலங்கைப் பெண் வைத்தியசாலையை விட்டு இனறு வெளியேறியுள்ளதாகவும் இத்தாலியில் உள்ள மிலான் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சீனாவுக்கு அடுத்த படியாக இத்தாலியே அதிக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடாகும். இத்தாலியில் 12,462 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 827 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, இத்தாலியில் தனிமைப்படுத்துவதை நிராகரிக்கும் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட சிறைத் தண்டணை விதிப்பதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.