இலங்கையில் 2 ஆவது நபருக்கு, கொரோன வைரஸ் உறுதியானது
இலங்கை மற்றுமொரு நபர் கொரோன வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியை சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
Post a Comment