Header Ads



பெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி

கொரோனா வைரஸ் காரணமாக பெல்ஜியத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த நாட்டை துயரத்திலாழ்த்தியுள்ளது.

பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ளார்.

12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதை தெரிவித்துள்ள பேச்சாளர் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரின் அந்தரங்கத்திற்கான உரிமையை மதிப்பதற்காக ஏனைய விடயங்களை தெரிவிக்க மறுத்துள்ளார்.

இந்த உயிரிழப்பு குறித்த அறிவித்தவேளை பெல்ஜியத்தின் அரச பேச்சாளர் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.

இது சிறுமியொருவரையும்,மருத்துவ மற்றும் விஞ்ஞான சமூகத்தினையும் பாதித்துள்ளது என்பதால் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறுமியின் குடும்பத்தவர்களின் துயரங்களை எண்ணி வேதனையடைகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிமூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பின்னர் அவரது நிலை மோசமடைந்தது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம் என்பதை இது நினைவுபடுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இது வழமைக்கு மாறானது என்றபோதிலும் ஏன் இது இடம்பெறுகின்றது என்பது இதுவரை தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெல்ஜியத்தில் 24 மணிநேரத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பெல்ஜியத்தில் 705 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.