Header Ads



பொது மக்களின் முன்னால், நிற்பதற்கு பின்னிற்க போவதில்லை


வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முதலாவது சந்தர்பத்திலேயே நாடாளுமன்றத்தை கலைத்து பொது மக்களின் முன்னால் நிற்பதற்கு பின்னிற்க போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை - கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை - கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.