Header Ads



தொகுதி அமைப்பாளர்களை நியமிக்குமாறு கோரி, கட்சி காரியாலயத்திற்கு வரவேண்டாம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதேச அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எந்த நிறுவனத்திலும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் ஊடாக இதுவரையில் நியமிக்கப்படவில்லை அத்துடன் பொதுஜன பெரமுன கட்சி யாப்பிற்கு அமையவே தொகுதி அமைப்பாளர் நியமனம் இடம் பெறும் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல்வேறு தேர்தல் தொகுதிக்கும் அமைப்பாளர்களை நியமிக்குமாறு  கோரிக் கொண்டு பல்வேறு தரப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் கட்சி  காரியாலயத்திற்கு வருகை தருதல் முறையற்ற செயல் ஆகவே  குழு அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலிறுயுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.