Header Ads



ஒரு இலட்சம் அரச தொழில் வாய்ப்புகளில் மோசடி - பாலித்த

(செ.தேன்மொழி)

ஒரு இலட்சம் அரச தொழில் வாய்ப்புகளில் மோசடிகள் காணப்படுவதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார , மக்களை ஏமாற்றி ஆட்சியமைத்துள்ள அரசாங்கம், தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

எட்டாம் தரம் வரையில் கல்விக்கற்று தொழிலின்றி இருக்கும் இளைஞர்கள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பொது தேர்தலை மையமாக கொண்டிருப்பதுடன், இதன்மூலம் அரசாங்கம் பல சூழ்ச்சிகளையும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. 

அத்துடன் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் , தனது ஆட்சியையும் மக்களை ஏமாற்றும் வகையிலே செயற்படுத்தி வருகின்றது. தமது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எந்தவித சலுகைகளையுமட் பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம் பொது தேர்தலின் பின்னர் எவ்வாறு பெற்றுக் கொடுக்கும். மக்களுக்கு இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எச்சரித்திருந்த போதும் அவர்கள் அதற்கே ஆதரவளித்துள்ளார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.