மனித உரிமைகள் பேரவையின், அறிக்கையை ஏற்க முடியாது - இலங்கை
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்கமுடியாது என்று பேரவையில் பதிலளித்து உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பேரவையின் 43வது அமர்வில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இலங்கை தொடர்பான தமது மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் நல்லிணக்கத்துக்காக இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஆணைக்குழு யோசனையை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனையில் புதிய மாற்று முயற்சி ஒன்றை இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டு வந்துள்ளமை குறித்து தாம் வருத்தமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment