ரஞ்சன் பிணையில் விடுதலை, வெளிநாடு செல்ல தடை
கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர் செய்யப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்வதற்கு கங்கொடவில நீதவான் எச்.யு.கே. பெல்பொல, தடை விதித்துள்ளார்.
மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று (04) பிற்பகல் சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அனுமதிப்பத்திரம் காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment