Header Ads



இரத்தினபுரியில் கொரோனா தொற்றா...?

கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார். 

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை ​மற்றைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து  வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், அவரது இரத்த மாதிரிகளை கொழும்பில் பரிசோதனைக்குட்படுத்தி அனுப்பிய பின்பே உறுதியான தீர்மானத்துக்கு வரமுடியுமென தெரிவித்துள்ள அவர், அவர் தனியார் சாரதியாக கடமையாற்றி வரும் நபரெனவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.