Header Ads



நாடு முழுவதும் சு.க. 4 ஆசனங்களையே பெறும் - இராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் பொதுத் தேர்த்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கை முழுவதும் போட்டியிட்டு நான்கு ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றும் என இராஜாங்க அமைச்சர் ரோசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னரே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியை சந்தித்ததாக தெரிவித்த அமைச்சர், அது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினரின் சூழ்ச்சியால் இடம்பெற்றதாக குறிப்பிட்டார். 

சூழ்ச்சி இல்லாத பயணத்திற்காக அனைவருடனும் கைகோர்க்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.