Header Ads



34,000 தரங்குறைந்த முகக் கவசங்கள் கண்டுபிடிப்பு

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் (30) பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. 

குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன. 

குறித்த முகக் கவசங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்த நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.