Header Ads



வெளிநாடுகளில் இருந்து Missed Call, வந்தால் 1700 என்ற இலக்கதிற்கு உடனடியாக முறையிடுங்கள்

உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு வௌிநாடுகளில் இருந்து மிஸ் கோல் வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அழைப்பு தொடர்பில் 1700 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் வாயிலாக அறியத்தருமாறும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக வௌிநாடுகளுக்குரிய இலக்கங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெருவதாகவும் ஆனால் எவரும் உரையாடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தினால் அழைப்பானது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

ஆனால் குறித்த அழைப்பிற்கு கட்டணம் அறவிடப்படுவதாகவும் கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.