Header Ads



இரத்­தத்தை நஞ்­சாக்கும் அபா­ய­க­ர­ பக்­றீ­ரியாவே, ஜெஸீலின் மரணத்திற்கு காரணம் - சட்டவைத்­திய அதி­காரி ரூஹுல் ஹக்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த வெ ள்ளிக்­கி­ழமை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் உயி­ரி­ழந்த இளை­ஞரின் மர­ணத்­துக்கு பக்­றீ­ரியா தாக்­கமே காரணம் என சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

செப்­டி­கே­மியா எனப்­படும் இரத்­தத்தை நஞ்­சாக்கும் அபா­ய­க­ர­மான பக்­றீ­ரியா தாக்­கத்­தி­னா­லேயே ஸைனுல் ஆப்தீன் ஜெஸீல் முகமட் எனும் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த 19 வய­தான இளைஞர் உயி­ரி­ழந்­த­தாக பிரேதப் பரி­சோ­த­னையை மேற்­கொண்ட கொழும்பு மாவட்ட சட்ட வைத்­திய அதி­காரி ரூஹுல் ஹக் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை சிறைச்­சா­லை­யினுள் பரவும் மேற்­படி உயிர்­கொல்லி பக்­றீ­ரி­யாவை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறு குறித்த இளை­ஞ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வெலிக்­கடை சிறைச்­சாலை அதி­கா­ரிக்கும் சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கும் சிறைக் காவ­லர்­க­ளுக்கும் உத்­த­ர­விட்­டுள்ளார்.

சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் தக­வல்­க­ளுக்­க­மைய குறித்த இளைஞர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை 8.30 மணி­ய­ளவில் தலை­வலி மற்றும் சுவாசப் பிரச்­சினை தொடர்பில் அதி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்­டுள்ளார்.இத­னை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். எனினும் சிகிச்சை பல­னின்றி அன்று நள்­ளி­ரவு அவர் உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறித்த இளை­ஞரின் சடலம் பிரேத பரி­சோ­த­னை­களின் பின்னர் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு காத்­தான்­கு­டிக்கு எடுத்துச் செல்­லப்­பட்டு சனிக்­கி­ழமை இரவு அடக்கம் செய்­யப்­பட்­டது. இவ்­வி­ளை­ஞரும் அவ­ரது சகோ­த­ரரும் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவரது சகோதரர் தற்போது கண்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Vidivelli

2 comments:

  1. Yes yes we belive that poison bakteria effect his death!(Goverment thinking we are still moodaiya)

    ReplyDelete

Powered by Blogger.