Header Ads



கி.பி 322 க்கு பின்னர், இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ள "கோட்டாபய மன்னர்" - நாயக்க தேரர் அறிவிப்பு

கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோட்டாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோட்டாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் சமய ரீதியாகவும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவார் என நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் கொட்டாவ, ருக்மலே தர்ம விஜயாலோக்க விகாரையில் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்போது விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தும்போதே சங்கைக்குரிய தேரர் அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ஸ்ரீ ராகுல அனுநாயக்க தேரரும் இங்கு வருகை தந்திருந்ததுடன், அரச நிறுவனங்களுக்கும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொருத்தமானவர்களை ஆட்சேர்ப்பு செய்து அரச கட்டமைப்பை முறைப்படுத்தி அதன் உச்சபட்ச பெறுபேறுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களின் தலையீட்டினை சங்கைக்குரிய தேரர் அவர்கள் நினைவுகூர்ந்தார். 

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாசங்கத்தினர் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களும் ஜனாதிபதி அவர்களுக்கு தங்களது ஆசிர்வாதங்களை தெரிவித்தனர். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.