Header Ads



வெளி­நா­டு­களில் இருந்து (ஹக்கர்ஸ்) வருகை, குறைந்­த­ளவு கெட்­ட­வ­ருக்கு வாக்களியுங்கள்

(தி.சோபிதன்)

இலங்­கையின் அடுத்த ஜனா­தி­ப­தியை தெரிவு செய்யும் உங்கள் அதி­கா­ரத்தை வீணாக்க வேண்டாம் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் இரட்­ண­ஜீவன் கூல், வேட்­பா­ளர்கள் அனை­வரும் கெட்­ட­வர்கள் என்று கரு­து­வது உங்கள் ஜன­நா­யக உரிமை. ஆனால் அனை­வரும் சம­மான அளவு கெட்­ட­வர்கள் என்று கூற முடி­யாது. அவர்­களில் யார் குறைந்­த­ள­வான கெட்­டவர் என்று கரு­து­கின்­றீர்­களோ அவர்­க­ளுக்கு வாக்­கி­டுங்கள் என்றும் தெரி­வித்­துள்ளார். 

யாழ்ப்­பாணம் பல்­கலைக் கழக ஊழியர் சங்­கத்தின் ஏற்­பாட்டில் நல்­லூரில் உள்ள யூரோவில் மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட ஜனா­தி­பதி தேர்தல் வழி­காட்டல் கருத்­த­ரங்கில் பங்­கேற்று கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறு­கையில்; 

இந்த தேர்­தலில் வாக்­க­ளிக்கக் கூடாது என்று கூறு­கின்­றனர். அது என்னைப் பொறுத்­த­வ­ரையில் மட­மைத்­தனம். வாக்­க­ளிக்க வேண்டாம் என்று கூறு­ப­வர்கள் வேட்­பா­ளர்கள் அனை­வரும் கெட்­ட­வர்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டாம் என்று கூறு­கின்­றனர்.

அனை­வரும் சம­மான அளவு கெட்­ட­வர்கள் என்று எடுத்துக் கொள்ள முடி­யாது. சிலபேர் பெரிய கெட்­ட­வர்கள், சிலர் கொஞ்சம் கெட்­ட­வர்கள். நீங்கள் வாக்­க­ளிக்­காது இருந்தால் பெரிய கெட்­டவர் பத­விக்கு வரச் சந்­தர்ப்பம் உண்டு.

அதைத் தடுப்­பது என்றால் நீங்கள் சென்று யார் குறைந்த கெட்­டவர் என்று நினைக்­கி­றீர்­களோ அவர்­க­ளுக்கு வாக்­கி­டுங்கள். அனை­வரும் கெட்­ட­வர்கள் என்று நினைப்­பது உங்­க­ளது ஜன­நா­யக உரிமை.

உங்கள் வாக்­கு­களை வீணாக்கக் கூடாது. சிந்­தித்துப் பாருங்கள் யாருக்கு வெற்றி பெறச் சந்­தர்ப்பம் இருக்­கின்­றது என்று. வெற்றி பெறச் சந்­தர்ப்பம் உள்­ள­வர்­க­ளுக்கு இடையே உங்கள் தெரிவை நீங்கள் மேற்­கொள்ள வேண்டும் என்றார்.

தேர்­தலில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த வெளி­நா­டு­களில் இருந்து கணினி நிரல் வல்­லு­நர்கள் (ஹக்கர்ஸ்) கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளனர் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அது சாத்­தி­யமா?என கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த அவர்,

பத்­தி­ரிகை வாயி­லா­கவே நாங்கள்  இதனை அறிந்தோம். அவர்­களால் தேர்­தலைத் திசை திருப்ப முடி­யாது என்றே நான் கரு­து­கின்றேன். அவர்­க­ளுக்கு உள்ள ஒரே ஒரு வழி பொய்ப் பரப்­புரை செய்­வது மட்­டுமே. அதனால் மக்கள் யார் சொல்­கின்­றனர், என்ன சொல்­கின்­றனர் என்­பது தொடர்பில் விழிப்­புடன் இருக்க வேண்டும்.

வெளி­நா­டு­களில் இருந்து “ஹக்கர்ஸ்” வந்­துள்­ளனர் என்று பத்­தி­ரிகை வாயி­லாக அறிந்தேன். சில வேட்­பா­ளர்கள் என்னைப் பொறுத்­த­வ­ரையில் கெட்­ட­வர்கள். அவர்கள் செய்யக் கூடி­ய­வர்­கள்தான். ஆனால் எனக்கு நேர­டி­யாகத் தெரி­யாது.

கேள்வி: அவ்­வாறு தேர்­தல்கள் திணைக்­களக் கணி­னிகள் மீது இணையத் தாக்­குதல் நடத்­தப்­பட்டால் அதை எதிர்­கொள்ளும் நிலையில் தேர்­தல்கள் திணைக்­களம் உள்­ளதா?

தேர்தல் முடி­வுகள் வரும்­போது அவை மூன்று கணினித் தொகு­தி­களில் சேமிக்­கப்­படும். அதை விடவும் கையெ­ழுத்து மூல­மான தர­வு­களும் பேணப்­படும். அதனால் அவர்­களால் அவற்றில் தாக்கம் செலுத்த முடி­யாது என்று நான் கரு­து­கின்றேன்.

ஆனால் பொய்த் தக­வல்கள் மூலம் மக்­களைக் குழப்ப முடியும். சமூக வலைத் தளங்கள் மூலம் அவற்றைக் செய்யக் கூடும். ஆனால் அதன் மூலம் தேர்­தலைக் குழப்ப முடியும் என்று நான் நினைக்­க­வில்லை.  அதன்­மூலம் வாக்­கா­ளர்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டலாம்.தேர்தல் முடிவு எண்­ணிக்­கையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடி­யாது.

கேள்வி: இது­வரை தேர்தல் வன்­மு­றைகள் தொடர்­பாக எவ்­வா­றான முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன?

எமக்குக் கிடைக்கும் முறைப்­பா­டு­களில் 75 வீதம் முறை­யற்ற நிய­ம­னங்கள் தொடர்­பா­கவே உள்­ளன. அவற்றை நிறுத்தக் கோரிப் பல முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. நாம் பல நிய­ம­னங்­களை நிறுத்­தி­யு­முள்ளோம். வன்­முறை முறைப்­பா­டுகள் குறை­வா­கவே உள்­ளன.

ஆனால் மக்­களை ஏமாற்றும் முறைப்­பா­டுகள் அதிகம் கிடைக்­கின்­றன. உதா­ர­ண­மாக ஒரு கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் தமக்கு ஆத­ர­வில்­லாத கிராமம் ஒன்றுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு வாக்கிடும் முறையை தவறாகக் கற்றுக் கொடுப்பது. அதன்மூலம் தமது எதிரணி வேட்பாளரின் வாக்குகளைக் குறைக்க முடியும் என்று சிந்திக்கின்றனர்.

அவ்வாறான குழப்பங்களைச் செய்பவர்களை மக்களுக்குத் தெரியும். குழப்பங்களைச் செய்யாதவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.என்றார்.

No comments

Powered by Blogger.