Header Ads



கோத்தாபாயவின் வெற்றி, உறுதியாகி உள்ளது - சுசந்த புஞ்சி நிலமே

பொதுஜன பெரமுன கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முதல் தடவையாக மொட்டு சின்னத்தினை அறிமுகப்படுத்தி 55 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.

தம்பலாகாமம் பகுதியில் இன்றைய தினம் -01- பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகள் மொத்தமாக 36 இலட்சம். அது பழமை வாய்ந்த கட்சி, பிரதமர் மற்றும் அதிக அமைச்சர்களை கொண்டதொரு கட்சி.

ஆனால் பொதுஜன பெரமுனவிற்கு 55,000 வாக்குகளை இம்மக்கள் அள்ளி வழங்கியுள்ளனர். ஆனால் இவ்வாக்குகள் மூலம் நாட்டு மக்கள் நிரூபித்து விட்டார்கள் பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தினை.

இவைகளை கொண்டு பார்க்கின்ற பொழுது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சவின் வெற்றி உறுதியாகி உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.