Header Ads



சஜித்திற்கு ஆதரவாக 72 Mp க்கள் உள்ளனர், அவர் தலைவராவது உறுதி என்கிறார் மரிக்கார்

- Anzir -

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா, நியமிக்கப்படுவது உறுதியானது என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,,

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்ப, எதிர்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவார் என்றே சபாநாயகர் கரு குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நோக்குகையில், சஜித் பிரேமதாசா எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக இதுவரை 45 பேர் கையொப்பமிட்டுள்ளனர். 

மேலும் சிலர் கையொப்பமிட காத்திருக்கின்றனர். சிறிய கட்சிகளும் தாம் சஜித்திற்கு ஆதரவாக கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கடிதம் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளன.

இதனால் சஜித் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவது உறுதியானது.

மிகவும் பலமான நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.