அனுரகுமாரவுக்கு வழங்கிய ஆதரவை மறுபரிசீலனை செய்கிறது ஐக்கிய இடதுசாரி முன்னணி
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு அளிக்க முடிவு செய்த ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘திசைகாட்டி’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவளிக்கவும், இரண்டாவது விருப்பு வாக்கை, அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கவும், கோருவதென ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்திருந்தது.
எனினும், கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும், என விடுத்த கோரிக்கைக்கு அமைய, தமது முடிவு குறித்து ஐக்கிய இடதுசாரி முன்னணி மறுபரிசீலனை செய்து வருகிறது.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்படும் என்று உறுதியாக தெரிவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
hello mr my heroo anura kumara im a j v p
ReplyDelete