Header Ads



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 500 இலட்சம் ரூபா ஹெரோயினுடன் இருவர் கைது

தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய வெளியேறும் பகுதியில் வைத்து 500 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வைத்து ஜீப் வண்டியொன்றிலிருந்து 50 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளதாகவும் இதன் போது குறித்த வாகனத்தில் இருந்த இருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் சுமார் 500 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியானவையாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.