காலி முகத்திடலை கலங்கடிக்க, சஜித் தரப்பு திட்டம் - தமது சத்தம் ரணிலின் காதுகளுக்கு கேட்கனுமாம்
அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி சஜித்திற்கான மக்கள் ஆதரவு கூட்டத்தை கொழும்பு காலி முகத்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சஜித் வருகினார் என்ற பெயரில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த கூட்டத்தின் சத்தம் ரணிலுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையில் நாளை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே காலிமுகத்திடலில் நடத்தப்படும் கூட்டத்திற்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக நேற்றையதினம் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அதனை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment