ஜனாதிபதி வேட்பாளர் பதவியை சஜித்திற்கு வழங்கிவிட்டு, நீங்கள் பிரதமராக இருங்கள் - ரணிலுக்கு யோசனை
ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிவிட்டு ரணில் விக்ரமசிங்க அதே பிரதமர் பதவியில் இருக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவினதும், கரு ஜயசூரியவினதும் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் என்பதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment